எமது பாடசாலையில் சரஸ்வதி பூஜை நிகழ்விற்கான போட்டி நிகழ்ச்சிகள்
(கோலம் போடுதல், பூ மாலை கட்டுதல், தோரனை அலங்கார வடிவமைப்பு) என்பன மாணவர்களுக்கிடையில் அதிபர் திருமதி. ம. பிரபாகரன் தலைமையில் 2023.10.09ம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கிடையில் நடைபெற்ற உடற்பயிற்சிக் கண்காட்சிப் போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் சிறப்பாக செயற்பட்டு வலயத்தில் 1ம் இடத்தைப் பெற்றதோடு, மாகாணமட்டத்தில் 3ம் இடத்தையும் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.