கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடிப் பிரதேசத்தில்; ஓந்தாச்சிமடம் கிராமத்தில்? அழகிய சூழலில் எமது பாடசாலை அமைந்துள்ளது. பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை என இரண்டு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு 491 மாணவர்களும் 43 ஆசிரியர்களும் கடமையாற்றுகின்றனர். களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் முதன்மையான பாடசாலைகளில் எமது பாடசாலையும் ஒன்று என்பதில் பெருமிதம் கொள்கின்றோம்
அறிவு, ஆற்றல், ஒழுக்கம் சுயநம்பிக்கையுடன் ஓய்வு நேரத்தை பயனுறுதியாக்கும் சமுதாயம்
அறப்பணியிலான கல்வியினூடாக எத்தகைய அனர்த்தத்திலும் அழியாது நாம் உயிர்வாழும்வரை நம்முடன் துணைநிற்பது கல்வியே அன்றி வேறு எதுவும் இல்லை என்பதை உணர்வுடன் கலந்து தன்நம்பிக்கையுடன் பண்பாட்டு விழுமியங்களைப் பேணி சமூகத்தில் சக்திமிகு பயனுறுதியாளனாக இணைந்து வாழ அறிவியலையும் கலையினையும் கருத்தாகக் கொண்டு அறிவு, திறன், மனப்பாங்குடன் புதியனவற்றைக் கற்று தெளிந்து சர்வதேச அறிவியலிலும் சிறந்து விளங்கும் தேர்ச்சியுள்ள மாணவர் சமுதாயத்தை உருவாக்களில் அனைவரும் கைகோர்த்து செயற்படுவோம்.